For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரேஸிலில் தொற்று நோய்க்கு 50 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

ரியோ டி ஜெனீரோ:

பிரேஸில் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் லெப்டோஸ்பைரோசிஸ் என்ற தொற்று நோய்க்கு இதுவரை 50 பேர் இறந்துள்ளனர்.

கடந்த 48 மணி நேரத்தில் பெர்னாம்புகோ என்ற மாநிலத்தில் மட்டும் 46 பேர் இறந்துள்ளனர். பெர்னாம்புகோவுக்கு அண்டை மாநிலமானஅலாகோவாஸிலும் லெப்டோஸ்பைரோசிஸ் தொற்று நோய் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த மாநிலத்தில் பலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.இரு மாநிலங்களிலும் 300 பேருக்கு இந் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நோய் வேகமாகப் பரவி வருகிறது. அடுத்த சில தினங்களில் இந் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும்அதிகாரிகள் தெரிவித்தனர்.

எலியின் சிறுநீரகத்திலிருந்து இந் நோய் பரவுகிறது. பிரேஸிலின் வடகிழக்குப் பகுதியில் இம் மாத தொடக்கத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்தவெள்ளப் பெருக்கு காரணமாக இந் நோய் பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந் நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X