தலைநகரை விட்டு வெளியேற ஆங் சென் சூயிகிக்குத் தடை

Subscribe to Oneindia Tamil

யாங்கூன் (மியான்மர்):

மியான்மர் தலைநகர் யாங்கூனை விட்டு வெளியே செல்ல அந் நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூயிகிக்கு அந் நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

தொடர்ந்து 3-வது நாளாக சனிக்கிழமையும் அவரும் அவரது ஆதரவாளர்களும் வெளியே செல்ல முடியாமல் சாலையோரத்தில் நின்று கொண்டுள்ளனர்.

ஆங் சான் சுகியீயின் வெளியே செல்லும் சுதந்திரத்துக்கு மியான்மர் நாட்டு ராணுவ அரசு விதித்துள்ள தடை, சர்வதேச அளவில் பலத்தவிமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

ஜனநாயகத்துக்கான தேசியலீக் கட்சித் தலைவரான ஆங் சான் சுகியீயும் அவரது ஆதரவாளர்களும் தலைநகர் யாங்கூனை விட்டு வெளியே செல்லமுயன்றனர்.

ஆனால், அவர்கள் வந்த காரை டாலா டவுன்ஷிப் என்ற இடத்தில் மியான்மர் போலீஸார் தடுத்து நிறுத்திவிட்டனர்.

தொடர்ந்து மூன்றாவது நாளாக அவர்கள் அங்கேயே சாலையோரத்திலேயே உள்ளனர். அவர்கள் மேற்கொண்டு செல்ல போலீஸார் அனுமதி மறுத்துவருகின்றனர்.

ஆங் சான் சுகியீக்குப் போதுமான பாதுகாப்பு இல்லை.அதனால்தான் அவரை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை என்று மியான்மர் அரசுதெரிவித்துள்ளது.

ஆனால், மியான்மர் அரசின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆங் சான் சுகீயிக்கு விதித்துள்ள தடை அவரது அடிப்படை சுதந்திரத்தையும், சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள மனித உரிமையையும் மீறுவதாகஉள்ளது என்று அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

இத் தடையால் மியான்மரில் மேலும் பதற்றம்தான் ஏற்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+