சன் டி.விக்கு வீடியோ கேசட் கிடைத்தது எப்படி?
சென்னை:
காட்டிலிருந்து வீரப்பனைச் சந்தித்துவிட்டு திரும்பிய அரசு தூதர் நக்கீரன் கோபால்கொண்டு வந்த வீடியோ கேசட் சன் டி.வி.க்கும், உதயா டி.வி.க்கும் மட்டும் கிடைத்ததுஎப்படி என தெரியாது என முதல்வரும், கோபாலும் தெரிவித்தனர்.
வீரப்பன் கோரிக்கைக்கு அரசு அளித்த பதிலுடனும், தஸ்தாவேஜுகளுடனும் நக்கீரன்கோபால் காட்டுக்குச் சென்று விட்டு, வீரப்பனைச் சந்தித்து பேச்சு வார்த்தைநடத்திவிட்டு சென்னை திரும்பினார்.
வீரப்பனால் பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்ட்டுள்ள கன்னட நடிகர் ராஜ்குமார்தனது குடும்பதினருக்காக பேசிய வீடியோ கேசட்டை கோபால் தன்னுடன் எடுத்துவந்தார்.
அந்த கேசட் வியாழக்கிழமை இரவு சன் டி.வி.யிலும், அதன் கன்னட சானலான உதயாடி.வி. செய்தியிலும் ஒளிபரப்பானது.
மற்றவர்களுக்குக் கொடுக்காமல் இந்த இரு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டும்அந்த கேசட் கொடுக்கப்ட்டது ஏன் என்ற கேள்விக்கு தமிழக முதல்வர், நான் சன்டி.வி.யைச் சேர்ந்தவன் அல்ல. இதுபற்றிச் சம்பந்தப்பட்டவர்களிடம் கேளுங்கள்என்றார்.
இதே கேள்வியை மாலையில், செய்தியாளர்களிடம் பேசிய கோபாலிடம்கேட்டபோது, நான் சன் டி.வி.க்கு கேசட் கொடுக்கவில்லை. இரண்டு வீடியோகேசட்டுகளை முதல்வரிடம் கொடுத்தேன். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுஎனக்குத் தெரியாது என்றார்.