கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேருக்கு 7 ஆண்டு சிறை
கோவை:
முன் விரோதம் காரணமாக ஒருவரைக் கொலை செய்ய முயன்ற மூவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை கணபதியைச் சேர்ந்தவர் சுந்தரேசன். இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (24), ராதாகிருஷ்ணன் (29), குட்டி (27),வேணுகோபால் (18), சந்திரன் (42), ஜெகதீசன் (32) ஆகியோருக்கும் இடையே முன்பகை இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 94-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி சத்தி மெயின் ரோட்டில் சுந்தரேசன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை விஜயகுமார், ராதாகிருஷ்ணன், குட்டி ஆகியோர் வழிமறித்து கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றனர். பலத்த காயமடைந்தசுந்தரேசன், மருத்துவனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார்.
சுந்தரேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விஜயகுமார், ராதாகிருஷ்ணன், குட்டி ஆகியோரைக் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த கோவை முதலாவது கூடுதல் உதவி அமர்வு நீதிபதி பிரேம்குமார் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும், சட்டவிரோதமாகக் கூடியதற்காக 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், சுந்தரேசனைக் கொலை செய்யமுயன்றதற்காக 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்தார். இந்த இரு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications