புதுவை தீ விபத்தில் ஒருவர் சாவு
புதுவை:
புதுவை சக்தி நகரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் கருகி இறந்தார். ஒருவருக்குப் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. 20-க்கும்மேற்பட்ட குடிசைகள் சாம்பலாயின.
சக்தி நகரில் பூச்சிமருந்து டப்பாக்களை வாங்கும் பழைய இரும்புச் சாமான் கடை உள்ளது. இக் கடைக்குப் பக்கத்தில் இருந்த குடிசை வீட்டில் அணைக்காமல்விட்டிருந்த அடுப்பிலிருந்து பரவிய தீ, இரும்பு சாமான் கடைக்குப் பரவியது. இக் கடையில் பிடித்த தீ மளமளவென்று அருகில் இருந்த மற்ற குடிசைகளுக்கும்பரவியது.
இந்த விபத்தில் ஒருவர் தீயில் கருகி இறந்தார். பழைய இரும்பு சாமான் கடை உரிமையாளருக்குப் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்குதீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீணை அணைத்தனர்.
இவ் விபத்தில் சுமார் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான பொருட்கள் தீயில் கருகி நாசமாகி விட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.