For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோகத்திலும் சுகத்தைத் தேடிய காமுகன்

By Staff
Google Oneindia Tamil News

விஜயவாடா:

எரிகிற கொள்ளியிலிருந்து சிகரெட் பற்ற வைப்பது போல, வெள்ளத்தால் மாநிலமேசோகத்தில் மூழ்கியிருக்கும்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த6 வயது சிறுமியைக் கற்பழித்துள்ளான் ஒரு காமுகன்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இந்த அறுவறுப்பான சம்பவம் நடந்துள்ளது.விஜயவாடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடிழந்த ஒரு குடும்பம் பள்ளி ஒனறில்தஞ்சம் புகுந்திருந்தது.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும், மற்றும் 300-க்கும் மேற்பட்டோரும்தங்களது உடமைகளை அங்கு எடுத்து வரும் பணியில் தீவிரவமாக ஈடுபட்டிருந்தனர்.அப்போது முகாமில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி மட்டுமே தனித்துஇருந்தாள்.

அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அங்கு வந்து சிறுமியிடம் நைச்சியமாகபேசி தனியே இருந்த ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கு வைத்துஅச்சிறுமியைக் கற்பழித்துள்ளார். பின்னர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.

அழுது கொண்டே வந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்ததில் நடந்த பரிதாபச்சம்பவம் தெரிய வந்தது. இதையடுத்து போலிஸில் புகார் கொடுக்கப்பட்டது.போலீஸார் காமுகனைக் கைது செய்தனர். சிறுமி மருத்துவமனையில்சேர்க்கப்பட்டாள்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X