போலீஸ்காரர் கொலை முயற்சி வழக்கில் 17 பேர் விடுதலை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை, கோட்டைமேடு பகுதியில் செக்போஸ்டில் இருந்த போலீஸ்காரரைக் கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரும் விடுதலைசெய்யப்பட்டனர்.
கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 96-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி பிரபாகரன், ஜெயகுமார் ஆகிய இரண்டு போலீஸாார்தாக்கப்பட்டனர். காயமடைந்த இவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இவர்களைத் தாக்கியதாக பாரக், மஷீத், நூர்முகமது, அப்பாஸ், முஸ்தபா ஆகியோர் உட்பட 17 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ் வழக்கை விசாரித்த கோவை முதலாவது கூடுதல் உதவி அமர்வு நீதிபதி பிரேம்குமார், இந்த வழக்கில் கைதான 17 பேரையும்குற்றவாளிகள் அல்ல எனக் கூறி விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications