இலங்கை ராணுவ வீரர்களுக்கிடையிலான சண்டையில் 2 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ராணுவ வீரர், கிரானேட் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில், அவரும், பொதுமக்களில்ஒருவரும் இறந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.

சம்பவத்தில் இறந்த ராணுவ வீரர் விடுமுறையில் இருந்தவர். கிழக்கு மட்டக்களப்பு மாவட்டம் அரப்பட்டை என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடந்தது.இதுதொடர்பான மேல் விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த சம்பவத்தில் பொதுமமக்களில் ஒருவரும், கிரானேட் வெடிகுண்டை வெடிக்கச் செய்த ராணுவ வீரரும் இறந்தனர். 8 பேருக்குக் காயம்ஏற்பட்டது.

9 விடுதலைப் புலிகள் சாவு:

இதற்கிடையே, கிழக்கு வவுனியா மாவட்டத்தில் ராணுவ வீரர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 9 விடுதலைப் புலிகள்கொல்லப்பட்டனர்.

பாலிகுலி என்ற இடத்தில் நடந்த மோதலில் 6 விடுதலைப் புலிகள் இறந்தனர்.

சாவகச்சேரி பகுதியில் நடந்த மோதலில் 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளின் மறைவிடங்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதலில்இவர்கள் உயிரிழந்தனர். அதே மாவட்டத்தின் மற்றொரு பகுதியில் நடந்த மோதலில் ஒரு புலி உயிரிழந்தார்.

இந்த நிலையில், இலங்கையின் வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் பரவலாக ஆங்காங்கே விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையேமோதல்கள் நடந்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராய்ட்டர்ஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+