பிரபாகரன் உருவம் பொறித்த தபால்தலைகள் ... கனடாவில் பரபரப்பு
டொரன்டோ:
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் படம் அடங்கிய தபால்தலைகள் கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடா தபால் துறை ஏப்ரல் 30-ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது.இதன்படிபொதுமக்கள் தங்களுக்குப் பிடித்தமான நபரின் புகைப்படத்தை தபால்துறைக்கு அனுப்பலாம். அப்படி அனுப்பினால், அவர்களின் படம் அடங்கிய 46சென்ட் மதிப்புள்ள தபால் தலையை கனடா தபால் துறை இலவசமாக வெளியிடும்என்பதே அந்த அறிவிப்பு.
ஆனால் கனடா தபால் துறை எதிர்பாராத அளவில் விடுதலைப் புலிகளின்அபிமானிகள் பலர் பிரபாகரன் படத்தை கடனா தபால் துறைக்கு அனுப்பிவைத்திருந்தனர். ஆனால் இதுகுறித்து அறியாத கனடா தபால் துறை பிரபாகரன் படம்அடங்கிய தபால் தலைகைள அச்சிட்டது.
இதுகுறித்து தேசிய தபால் துறை செய்தித் தொடர்பாளர் டிம் மெக்குரின் கூறுகையில்,விடுதலைப் புலிகளின் தலைவர் என்று தெரியாமலேயே பிரபாகரன் படம் பொறித்ததபால் தலைகள் அச்சிடப்பட்டு விட்டன. கனடா தபால் துறைச் சட்டப்படிகொடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் தபால் தலையாக அச்சிடப்படவேண்டும் என்றார் அவர்.
இருப்பினும் அச்சிடப்பட்ட தபால் தலைகள் இன்னும் விநியோகிக்கப்படவில்லைஎன்று தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.