நஷ்டத்தில் ஓடுகிறது மாருதி
டெல்லி:
மாருதி உத்யோக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பயணிகள் கார்களின் விற்பனைஅயல் நாடுகளில் குறைந்ததால் அந்த நிறுவனத்திற்கு ஏற்றுமதியில் பெருத்த நஷ்டம்ஏற்பட்டுள்ளது.
மாருதி உத்யோக் நிறுவனம் மாருதி 800, மாருதி 1000, மாருதி ஜென், மாருதி எஸ்டீம்ஆகிய கார்கள் மற்றும் மாருதி ஆம்னி என்ற வேனையும் இந்தியாவில் தயாரித்துவருகிறது. இந்தக் கார்கள் அயல் நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மாருதி கார்களின் விற்பனை வெளி நாடுகளில் குறைந்ததால் மாருதிஏற்றுமதி 35.6 சதவிகிதம் குறைந்தது.
அதே சமயம் இந்தியாவில், மாருதி நிறுவனத்தின் போட்டி நிறுவனமான டெல்கோநிறுவனத்தின் பயணிகள் மற்றும் பல்நோக்கு வாகனங்களின் விற்பனைஅதிகரித்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கழகம்தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பயணிகள் கார்களின் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 4.7.சதவிகிதம் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு 2.086 யூனிட் என்ற அளவில் இருந்தவிற்பனை இந்த ஆண்டு 2,185 யூனிட் என்ற அளவை எட்டியுள்ளது.
மொத்த ஏற்றுமதி இந்த நிதியாண்டில் சென்ற நிதியாண்டைக் காட்டிலும் 27.1சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டில் மாருதியின் கார் ஏற்றுமதி சென்றஆண்டை விட 10.5 சதவிகிதம் குறைந்துள்ளது. அதே சமயம் டெல்கோவின் ஏற்றுமதி37.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications