For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியத் தூதரகஅதிகாரி வெளியேற பாகிஸ்தான் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்திய தூதரக அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வரும் பி.சி.தே, உடனடியாக நாட்டை விட்டுவெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது. முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் நியாமில்லாத வகையில் பாகிஸ்தான் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி மாலிக் மொகம்மது ரபீக்கை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி சிலதினங்களுக்கு முன் இந்தியா உத்தரவிட்டது. இந்தியாவுக்குள் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இந் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.ஆனால், அந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

இந் நிலையில், நாட்டை விட்டு வெளியேறம்படி இந்திய தூதரக அதிகாரிக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இந்திய நடவடிக்கைக்குப் பதிலடியாக இந்நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X