கிராமங்கள் தோறும் தகவல் தொடர்பு மையம்"
கோவை:
இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தகவல் தொடர்பு மையம் அமைக்கப்படும். அந்த மையங்களில் இன்டர்நெட் வசதி உட்பட அனைத்துவசதிகளும் ஏற்படுத்தப்படும் என மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
கோவை செல்லும் வழியில் கொடைக்கானல் வந்த அவர் அங்கு நிருபர்களிடம் கூறியதாவது:
தொலைபேசித் துறை ஊழியர்களுக்கு பென்ஷன் உட்பட அனைத்து நிதி உதவிகளையும் அரசு வழங்கியுள்ளது. தற்போது போராட்டத்தில்ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன.
இவர்களது கோரிக்கையைப் பரிசீலனை செய்ய நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்று வரும் போராட்டம் ஓரிரு நாட்களில் சரிசெய்யப்படும்.
தொலைபேசித் துறையை தனியார்மயமாக்கும் அரசின் திட்டத்தில் எவ்வித மாற்றம் இல்லை. இதில் ஊழியர்களின் நலன் எவ்விதத்திலும்பாதிக்கப்படாது.
அரசு அறிவித்தபடி அடுத்த இரண்டு ஆண்டுகளில் கிராமங்கள் தோறும் தெலைபேசித் தேவை நிறைவு செய்யப்படும். 6 லட்சத்து 7 ஆயிரம் கிராமங்களுக்குதொலைபேசி வசதி செய்து தரப்படும். தற்போது 3 லட்சத்து 76 ஆயிரம் கிராமங்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
அஞ்சல் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அஞ்சலகங்களும் தகவல் தொடர்பு நிலையங்களாக மாற்றிஅமைக்கப்படும். இங்கு இன்டர்நெட் வசதி உட்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் பாஸ்வான்.












Click it and Unblock the Notifications