For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எனக்கு சூதுவாது தெரியாது ... ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

எனக்கு சூது வாது தெரியாது. நான் சொல்வது எல்லாம் நடக்கும் என்று பாட்டாளிமக்கள் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை பூந்தமல்லி சட்டசபைத் தொகுதி பா.ம.க. மாநாட்டில் ராமதாஸ் பேசினார்.

அவர் பேசுகையில், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஒரே கட்சிபா.ம.க. தான். எந்த அரசியல் கட்சியும், எந்த அமைப்பும் பா.ம.க .அளவுக்கு மாநாடுநடத்தவில்லை. பா.ம.க. பல மாநாடுகளை நடத்தியுள்ளது.

ராஜீவ்காந்தி மறைவுக்கு பின் ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடத்தினோம். 1988ல்டெல்லியில் சமூகநீதி பாதுகாப்பு மாநாடு நடத்தினோம்.

முதலில் பா.ம.க. ஒரு வன்னியர் கட்சி என்று சொன்னார்கள். இப்போது இது ஒருஅரசியல் கட்சி என்று அனைவரும் ஏற்றுக் கொண்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் 56 கட்சிகள் இருக்கின்றன. ஆட்சியாளர்கள் சரியில்லாத காரணத்தால்கட்சி ஆரம்பித்தோம். சமூக பொருளாதார முன்னேற்றம், கல்வி, வேலைவாய்ப்புஏற்படுத்தி தருவது தான் நோக்கம்.

தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தில் பா.ம.க. இருக்கிறது. பாண்டிச்சேரியில் 2001ல்ஆட்சியை பிடிப்போம். 2006ல் தமிழ்நாட்டில் பா.ம.க. ஆட்சி தான்.

தற்போது கூட பா.ம.க. ஆதரவு இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் ஆட்சி அமைத்துவிட முடியாது. அந்தளவுக்கு பா.ம.க .செல்வாக்கு பலத்தோடு திகழ்கிறது. அரசியலில்நெளிவு சுளிவு இருக்க வேண்டும் என்பதற்காக வாய்மூடி இருக்கிறேன்.

2001-ல் பாருங்கள், நான் பேசப் போவதை. எனக்கு சூதுவாது தெரியாது. நான்சொல்வது எல்லாம் நடக்கும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X