ஊமைச் சிறுமியைக் கற்பழித்த சிறுவர்கள்
திருவள்ளூர்:
வாய் பேச முடியாத சிறுமியைக் கற்பழித்த இரண்டு சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த குமார ராஜூ பேட்டையைச்சேர்ந்த கதிர்வேல், இவரது மகள் செல்வகுமாரி (வயது எட்டு).
செல்வகுமாரி ஒரு வாய் பேசமுடியாத ஊமை. இவள் அதே பகுதியில் தினசரி ஆடு மேய்த்து வந்தாள். அவருடன் அதே பகுதியைச்சேர்ந்த குருவப்ப ரெட்டியார்மகன் சுதாகர் (வயது 13), கோவிந்த சாமி ரெட்டியார் மகன் ஜானகிராமன் (வயது 13) ஆகியோரும் மாடு மேய்த்து வந்தனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மதியம் 2 மணி அளவில் அந்த கிராமத்தின் வயல் பகுதியில் சிறுமி செல்வகுமாரியை சுதாகர், ஜானகிராமன் இருவரும்கற்பழித்துள்ளனர்.
மாலையில் வீட்டிற்கு திரும்பிய சிறுமியிடம் பெற்றோர் விசாரிக்க, சிறுமி கைகளால் ஜாடைகாட்டி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோருக்கு தெரியவைத்து அழுதாள். இதையடுத்து கதிர்வேல் பள்ளிப்பட்டு போலீஸில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்கள் இருவரையும் கைது செய்தனர். திருத்தணி கோர்ட்டில் வெள்ளிக்கிழமை இருவரையும் ஆஜர்செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் குற்றம் செய்த இருவரையும் 15 நாள்கள் காவலில் வைக்க உத்திரவிட்டார்.












Click it and Unblock the Notifications