சாதிக் கட்சிகள் தேவையில்லை என்கிறார் பழனிவேல்ராஜன்
சென்னை:
ஒரு சமுதாயத்தை அழிப்பதற்கு ஒரே வழி அச் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு சங்கம் அரசியல் கட்சியாக மாறுவதுதான். ஆகவே, சாதிக் கட்சிகள்தேவையில்லை என்று தமிழக சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் தெரிவித்தார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் வி.கே. ராமசாமி முதலியாரின் நூற்றாண்டு விழாவில் அவர்பேசியதாவது:
தமிழகத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவு 70 ஆண்டுகளுக்கு முன்பே நீதிக் கட்சி ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு சமுதாயத்தை அழிப்பதற்கு ஒரே வழி, அச் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு சங்கம் சாதிக் கட்சியாக மாறுவதுதான். சிறுபான்மைச் சமுதாயங்கள்ஒவ்வொன்றும் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கினால் அச் சமுதாயங்கள் விரைவில் காணாமல் போய்விடும்.
தப்பித் தவறி முதலியார் சமுதாயத்தில் நான் பிறந்துவிட்டேன். முதலியார் சமுதாய மக்களுக்காக அனைத்து முதலியார்கள் சங்கம் உருவாக்கப்பட்டுளளது.
சிறுபான்மைச் சமுதாய மக்களைக் காப்பாற்றிய முதலியார்களைக் காப்பாற்ற இப்போது இச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இது சங்கமாகவேஇருந்துவிடட்டும். முதலியார்களுக்கு என்று தனிக் கட்சி தேவையில்லை.
நீதிக் கட்சியின் உண்மையான வாரிசான முதல்வர் கருணாநிதி, நமது முன்னோர்களைப் போல் சிறுபான்மையினரையும் மற்றவர்களையும் நிச்சயம் காப்பார்என்றார் பழனிவேல் ராஜன்.












Click it and Unblock the Notifications