தமிழ்நாடு - இலங்கை இடையே மீண்டும் கிரிக்கெட்
சென்னை:
இலங்கைக்கும், தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கும் இடையே நடைபெற்று வந்த கோபாலன் கோப்பை கிரிக்கெட் போட்டி மீண்டும் நடைபெற உள்ளது.
தமிழ்நாடுக்கும், இலங்கைக்கும் இடையே விளையாட்டு ரீதியான உறவை வலுப்படுத்தும் வகையில் கோபாலன் கோப்பை கிரிக்கெட் போட்டிநடத்தப்பட்டது.
ஆண்டுதோறும் நடைபெறும் இப் போட்டியில் தமிழ்நாடு கிரிக்கெட் அணியும், இலங்கை அணியும் விளையாடிவந்தன.
ஓராண்டு இலங்கை அணி தமிழ்நாடு வந்து விளையாடினால், மறு ஆண்டு தமிழ்நாடு அணி இலங்கைக்குச் சென்று விளையாடும்.
கடைசியாக 1982-ம் ஆண்டு கோபாலன் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதன்பிறகு, இலங்கையில் இனப் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்துஇப் போட்டி நிறுத்தப்பட்டது.
இப்போது கோபாலன் கோப்பை கிரிக்கெட் போட்டி மீண்டும் நடத்தப்படவுள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் அணி செப்டம்பர் 21-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
அங்கு 3 மூன்று நாள் கிரிக்கெட் போட்டிகளிலும், 2 ஒருநாள் போட்டிகளும் தமிழ்நாடு அணி விளையாடும் என்று தமிழ்நாடு அணியின் கேப்டனும், இந்தியகிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
தமிழ்நாடு அணியுடன் மாவட்ட லெவன் அல்லது இலங்கை கிரிக்கெட் வாரிய லெவன் அணி விளையாடும். அவற்றில் இலங்கை தேசிய அணியைச் சேர்ந்தகுறைந்தது 6 பேராவது விளையாடுவார்கள் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.