மேட்டூர் அணை நிரம்புகிறது
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 18ம் தேதி மாலையில் அணைக்கு நீரின் வரத்து வீனாடிக்கு 44 ஆயிரத்து 100 கன அடி வீதம் இருந்தது. இதையடுத்து அணையின் நீர்மட்டம்வேகமாக நிரம்பி வருகிறது.
அணையின் நீர்மட்டம் தற்போது 60.1 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 94 அடியாகும்.
அணையிலிருந்து விவசாயத்திற்கு கடந்த ஜூன் 12ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஆனால், நீர்மட்டம் உயர்ந்துள்ளதையடுத்து 9ஆயிரத்து 820 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.












Click it and Unblock the Notifications