லஞ்சம் வாங்கிய தமிழக சுங்கத்துறை அதிகாரி கைது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

திருச்சியில் ரூ. 4.3 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய சுங்கத்துறை (சென்ட்ரல் எஸ்சைஸ்) அதிகாரியை சி.பி.ஐ. கைது செய்தது.இவருடன் கூட்டு சேர்ந்து லஞ்சம் வாங்கிய மற்றொரு அதிகாரி தலைமறைவாகிவிட்டார்.

திருச்சியில் மத்திய சுங்கத்துறை அலுவலகத்தில் குற்றத்தடுப்புப் பிரிவில் கண்காணிப்பாளர்களாக பணியாற்றி வருபவர்கள் தமிழ்அரசன், ஜெயக்குமார். சமீபத்தில் வரி ஏய்ப்பு செய்த ஒருவரை இவர்கள் பிடித்தனர். அவர் மீது சட்டப்படி நடவடிக்கைஎடுக்காமல், அவரை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமானால் ரூ. 5 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டனர்.

பின்னர் அவருடன் பேரம் செய்து ரூ. 4.3 லட்சம் கொடுத்தால், வழக்கிலிருந்து தப்ப விடுவதாக உறுதியளித்தனர்.

இதையடுத்து அந்த நபர் இந்த இரு அதிகாரிகள் குறித்தும் சி.பி.ஐயிடம் புகார் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. இவர்கைளப் பிடிக்க வலை விரித்தது. அந்த நபரிடம் ரூ. 4.3 லட்சத்தை தமிழரசனிடம் அளிக்குமாறுசிபிஐ அதிகாரிகள் கூறினர்.

தமிழரசன் அந்த பணத்தை வாங்கியபோது மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் அவரைக் கையும் களவமாகப் பிடித்தனர். அவரைகாவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து ஜெயக்குமார் தலைமறைவாகிவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+