கோவையில் எம்.எல்.ஏ. தாக்கப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு
கோவை:
கோவை அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. தாக்கப்பட்ட வழக்கு விசாரணை, செப்டம்பர்4-----ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோவையில் போலீஸ்காரர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட மறுநாள் கோவையில் பெரும்கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரம் கோவை அரசு மருத்துவமனைக்குப் பரவியது.
அப்போது மருத்துவமனைக்கு வந்திருந்த கோவை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. தண்டபாணியை ஒருகும்பல் தாக்கியது. அவரது காருக்கும் அக் கும்பல் தீ வைத்தது.
இச் சம்பவம் தொடர்பாக இந்துமக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் மற்றும் 11 பேர் மீதுவழக்குத் தொடரப்பட்டது. இவ் வழக்கு கோவை மூன்றாவது சார்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
வியாழக்கிழமை இவ் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளும்படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அனுமதி அளித்து வழக்கை செப்டம்பர் 4-ம்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இது தவிர அர்ஜுன் சம்பத் மற்றும் அதிரடி ஆனந்தன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த ஜாமீன்மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications