கொலம்பியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 20 பேர் சாவு
பகோதா (கொலம்பியா):
கொலம்பியா முழுவதிலும் அமெரிக்க அதிபர் கிளிண்டனுக்கு எதிராக மார்க்சிஸ்ட் புரட்சிக்காரர்கள் நடத்திய திடீர் தாக்குதலில் 20 பேர்கொல்லப்பட்டனர்.
அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க மக்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடந்தது. கொலம்பியாவிலுள்ள முக்கியமான தீவிரவாதஅமைப்புகளான கொலம்பிய புரட்சிகர ராணுவப் படை மற்றும் தேசிய விடுதலைப் படை ஆகிய இரு கொரில்லா தீவிரவாத அமைப்புகளும் இந்ததாக்குதலில் ஈடுபட்டன.
இரு அமைப்புகளையும் சேர்ந்த 22,000 தீவிரவாதிகள் நாடு முழுவதும் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். ராணுவம், போலீஸ் நிலைகள் மீது இவர்கள்தாக்குதல் நடத்தினர். வங்கிகளில் குண்டு வீசினர். கொலம்பியாவின் 32 மாநிலங்களில் 9 மாநிலங்களில் கடுமையான தாக்குதல் இருந்ததாகக்கூறப்பட்டது. ஒரு எண்ணெய்
பைப் லைனிலும் இவர்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர்.
கொலம்பியாவின் துறைமுக நகரான கார்ட்டஜீனா நகரில் அமெரிக்க அதிபர் கிளிண்டனும், கொலம்பிய அதிபர் ஆன்டிரஸ் பாஸ்ட்ரானாவும் புதன்கிழமைசந்தித்துப் பேசினர். இந்தப் பகுதியில் வன்முறை ஏதும் இல்லை என்று கொலம்பியப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
கிளிண்டன் கலந்து கொண்ட இந்த சந்திப்புக்குக் கடும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 5000 ராணுவ வீரர்கள், போலீஸார் மற்றும் அமெரிக்க புலனாய்வுஏஜென்டுகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.