தீபாவளியன்று வெடி வெடிக்க டெல்லியில் கட்டுப்பாடு
டெல்லி:
தீபாவளியின்போது மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை தான் வெடிகளை வெடிக்க வேண்டும் என டெல்லிஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தவிர சுற்றுச்சூழல்துறையின் விதிகளை மீறி அதிக சப்தத்துடன் வெடிக்கும் வெடிகளை உடனே தடைசெய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டர் தொலைவுக்கு 125 டெசிபல் ஒலியை உண்டாக்கும் எந்த வெடிக்கும் அனுமதிஅளிக்க முடியாது என சுற்றுச்சூழல்துறை கடந்த ஆண்டில் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுப்படி ஒரு கார் டயர் வெடிக்கும் சப்தத்திற்கு அதிகமான ஒலியை உருவாக்கும் வெடிகளை வெடிக்கதடை போடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விதிகளை மதிப்பதற்கு நாட்டில் ஆளே இல்லை.
இதை டெல்லி உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. விதிகளை அமலாக்க போலீசாராலும் மாநகராட்சிஅதிகாரிகளாலும் முடியாவிட்டால், அப்புறம் விதிகளை கொண்டு வருதில் என்ன பயன் உள்ளது என நீதிமன்றம்கேள்வி எழுப்பியது.
இதனால், வெடிகள் தொடர்பான எந்த விதி மீறப்பட்டாலும் அதில் தொடர்புடையவர்களை உடனே கைதுசெய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெடிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் அந்த வெடி உருவாக்கும் சப்தத்தின் அளவு குறித்து வெடிகளின் மீதேஅச்சிட வேண்டும். இது வரும் நவம்பர் 1 ம் தேதி முதல் அமலாக்கப்பட வேண்டும்.
வெடிகளை திறந்த மைதானங்களில் தான் வெடிக்க வேண்டும். மருத்துவனைகள் அருகே வெடி வெடிக்கக் கூடாதுஎன்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.