தலித் அமைப்பினர் கல்வீச்சில் 9 போலீஸார் காயம்
மதுரை:
விடுதலை சிறுத்தை அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் நடத்திய கல்வீச்சில் 9போலீசார் காயமடைந்தனர்.
விடுதலை சிறுத்தை அமைப்பினைச் சேர்ந்த தொண்டர்கள் மதுரைக்கு அருகே உள்ளமேலவளவு என்ற கிராமத்தில் 7 தலித்களுக்கான நினைவிடத் திறப்பு விழாவிலிருந்துதிரும்பி வரும் வழியில் இந்த சம்பவம் நடந்தது.
விடுதலை சிறுத்தை தொண்டர்கள் திடீரென்று கல் வீச்சில் ஈடுபட்டனர். அவர்கள் கல்எறிந்ததில் நகரப் பேருந்தின் ஓட்டுனர் காயமடைந்தார். ஒன்பது போலீசாரும்காயமடைந்தனர். அதன் பின்னர் போலீசார் தலையிட்டு நடவடிக்கை எடுத்தனர் எனமதுரை காவல் துறை கண்காணிப்பாளர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தை இயக்கத்தைச் சேர்ந்த 83 தொண்டர்கள்கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 22 அரிவாள்கள், மரக்கட்டைகள்மற்றும் நான்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே, தங்கள் தொண்டர்களை போலீசார் வேண்டுமென்றே கடுமையாகஅடித்து கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்யவேண்டும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு கோரியுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications