For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தலை எதிர்க்கும் வழக்குகளை அனுமதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தேர்தல் நடைமுறைப் பணிகள் தொடங்கிவிட்டால் தேர்தலை எதிர்த்து யாராவது மனுதாக்கல் செய்தால் அதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 329 (பி) பிரிவைச் சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றத்தின்தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் மற்றும் நீதிபதிகள் ஆர்.சி.லஹோடி, கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 226-வது பிரிவுஇதன் மூலம் செயலிழந்ததாகிவிடுகிறது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ஆகவே, தேர்தல் நடைமுறைப் பணிகள் தொடங்கிவிட்டால் அந்த தேர்தலை எதிர்த்துஇனி யாரும் மனு தாக்கல் செய்யமுடியாது. அப்படி தாக்கல் செய்தாலும் அந்த மனுஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்படும் என்ரு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. கேரளத்தில் நடந்த தேர்தல்பணிகள் தொடர்பாக வாக்குகளை எண்ணுவது, தேர்தல் கமிஷன் தனது அதிகாரத்தின்கீழ் செயல்படுவது ஆகியவை குறித்து தேர்தல் கமிஷன் ஒரு அறிவிக்கைவெளியிட்டது.

இந்த அறிவிக்கையை அரசியலமைப்புச் சட்டத்தின் 226-வது பிரிவைக் காரணம்காட்டி கேரள உயர்நீதிமன்றம் தடை செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தேர்தல் கமிஷன் மனு செய்தது.

இந்த மனு மீது விசாரணை நடத்தி மேற்கண்ட புதிய உத்தரவை உச்ச நீதிமன்றம்பிறப்பித்துள்ளது. தேர்தல் குறித்து மனு தாக்கல் செய்வதாக இருந்தால் தேர்தல் முடிந்தபிறகு அல்லது தேர்தலுக்கு முன்பாகத்தான் செய்யவேண்டும். இடையில் தாக்கல்செய்யும் எந்த மனுவும் தள்ளுபடி செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம்அறிவித்துள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X