எர்ஷாத்துக்கு எம்.பி. பதவி போச்!
டாக்கா:
வங்கதேச முன்னாள் ராணுவ ஆட்சியாளர் உசேன் முகம்மது எர்ஷாத்திடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.
முன்னாள் சர்வாதிகாரியான எர்ஷாத் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது. நீதிமன்ற விசாரணையில் இது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 5ஆண்டு சிறைத் தண்டனை விதித்து வங்கதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து எர்ஷாத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதாக நாடாளுமன்றஅதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைநகர் டாக்காவின் மையப் பகுதியில் எர்ஷாத் கட்டி வரும் பலமாடி கட்டடம் தொடர்பான வழக்கில் அவருக்கு ரூ.4.4 கோடி அபராதம்விதிக்கப்பட்டது.
எர்ஷாத்தின் வருமானத்துக்கும் அதிகமாக அக் கட்டடம் கட்ட செலவிடப்படுகிறது. அந்த கூடுதல் பணம் ஊழல் செய்து பெறப்பட்டது என்று அவர் மீதுகுற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றமும் நிரூபிக்கப்பட்டுத்தான் அவருக்கு ரூ. 4.4 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தது சட்டவிரோதம். யாரும் எனது பதவியைப் பறிக்கமுடியாது என்று வங்கதேச உச்சநீதிமன்றத்தில்தாக்கல் செய்த அப்பீல் மனுவில் எர்ஷாத் கூறியுள்ளார்.
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அப் பதவியை இழக்கவேண்டும் என்பது வங்கதேச பொதுமக்கள் பிரதிநிதித்துவச்சட்டமாகும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications