போட்டியை சமாளிக்க கூட்டமைப்பு வியாபாரிகள் சங்கம் முடிவு
குன்னூர்:
பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் ஏற்படும் பாதிப்பை எதிர்த்து போராட ஒருபுதிய கூட்டமைப்பை நீலகிரி மாவட்ட வியாபாரிகள் சங்கம் உருவாக்கி வருகிறது.
பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் விரைவில் தங்களது ஆதிக்கத்தைச்செலுத்தவுள்ளன.
இதனால் வியாபாரத்தில் ஏற்படும் கடும் போட்டியைச் சமாளிக்க தமிழக வியாபாரிகள்சங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த தமிழ்நாடு வியாபாரிகள் சங்கங்களில் கூட்டமைப்பை உருவாக்கி வரும் இதன்பொதுச் செயலர் மோகன் குன்னூரில் நடந்த வியபாரிகள் சங்க நிகழ்ச்சி ஒன்றில்கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் வியாபாரிகள் சங்கங்கள் உள்ளது. இந்த சங்கங்கள்அனைத்தையும் ஒற்றுமைப்படுத்தி புதிய கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில்ஈடுபட்டு வருகிறோம்.
எதிர்வரும் காலத்தில் சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் நுழைய உள்ளன. இந்தநிறுவனங்கள் ஏற்படுத்தும் கடும் போட்டியை எதிர்த்து போராட அனைத்துதிட்டங்களையும் இக் கூட்டமைப்பு வகுக்கும் என்றார்.