சிக்னல் வந்தது ... காட்டுக்குள் நுழைந்தார் கோபால்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து அனுமதி கிடைத்ததையடுத்து அரசுத் தூதராகசென்றுள்ள நக்கீரன் ஆசிரியர் கோபால் காட்டுக்குள் பயணத்தைத் துவக்கினார்.
நடிகர் ராஜ்குமார் உள்ளிட்டவர்களை மீட்பதற்காக நக்கீரன் கோபால் தொடர்ந்துமுயற்சிகளை மேற்கொண்டுள்ளார். தமிழ்த் தீவிரவாதிகள் விடுதலை, தமிழ் கைதிகள்விடுதலை உள்ளிட்ட வீரப்பனின் சில கோரிக்கைகளுக்கு தமிழக, கர்நாடக அரசுகளின்பதில்களுடன் தற்போது மூன்றாவது முறையாக காட்டுக்குச் சென்றுள்ளார்.
புதன்கிழமை இரவு அவர் காட்டுக்குள் நுழைந்துள்ளதாக நக்கீரன் பத்திரிகைஇணையாசிரியர் காமராஜ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டஅறிக்கையில், கோபால், நக்கீரன் அலுவலகத்தை புதன்கிழமை மாலை தொடர்புகொண்டார். வீரப்பனிடமிருந்து உத்தரவு கிடைத்து விட்டதாகவும், தான் காட்டுக்குள்பயணத்தைத் துவக்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த முறை வீரப்பனைச் சந்திப்பதில் எந்தவித தடையும் இருக்காது என்று தான்நம்புவதாக அவர் தெரிவித்தார். மேலும், விடுதலை குறித்த தகவல் ரேடியோ மூலம்கிடைக்கும் என்று நம்புவதால் ராஜ்குமார் உள்ளிட்டவர்களை மீட்பதில் சிக்கல்இருக்காது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார் என்று காமராஜ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications