சந்திரபாபு நாயுடு பதவி விலக இளங்கோவன் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மக்கள் விரோத ஆட்சி புரிந்து வரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடனடியாகபதவி விலக வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோரியுள்ளார்.

இதுகுறித்து இளங்கோவன் கூறுகையில், ஹைதராபாத் நகரில் ஆகஸ்ட் 28-ம் தேதிஅமைதியான முறையில் நடந்த காங்கிரஸ், இடது சாரிக் கட்சித் தொண்டர்களின்ஊர்வலத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மின் கட்டணத்தைக்குறைக்கக் கோரி அமைதியான முறையில் நடந்த இந்த ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடுநடத்தியது கண்டிக்கத்தக்கது.

சர்வாதிகார போக்கில் நடந்து வருகிறார் நாயுடு. மத்திய அரசு தலையிட்டு உடனடியாகஆந்திர மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட முயற்சிக்க வேண்டும்.

மக்கள் விருப்பத்திற்கேற்ற வகையில் ஆட்சி புரிய முடியாத சந்திரபாபு நாயுடுஉடனடியாக பதவி விலக வேண்டும். அவர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். பொதுமக்களுக்குக் கட்டுப்படியாகும் வகையிலான கட்டணத்தில்மின்சாரத்தை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும் என்றார் அவர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+