ஜப்பான் செல்லும் மாநகராட்சிப் பள்ளி மாணவி
சென்னை:
ஜப்பான் தூதரகம் நடத்திய பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவி ஸ்ரீலட்சுமி அடுத்த மாதம் ஜப்பான் செல்கிறார்.
சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவி ஸ்ரீலட்சுமி.
சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகமும், ஏ.பி.டி. - ஏ.ஓ.டி.எஸ். தொசாக்கா எனும் ஜப்பான் நாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய பேச்சுப் போட்டியில்ஸ்ரீலட்சுமி பங்கேற்றார். பல கட்டங்களாக நடந்த இப்போட்டியின் இறுதிச் சுற்றில் "மக்கள் தொகையும் மாசுபடுதலும் என்ற தலைப்பில் ஸ்ரீலட்சுமி பேசிமுதலிடம் பெற்றார்.
முதலிடம் பெறும் மாணவி ஜப்பான் நாட்டுக்கு அழைத்துச் சென்று கவுரவிக்கப்படுவார் என்று ஏற்கனவே போட்டியாளர்கள் அறிவித்திருந்தனர். அதன்படிஸ்ரீலட்சுமியை அடுத்த மாதம் ஜப்பான் நாட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
மிகப் பிரபலமான பள்ளிகள் நிறைந்த சென்னையில் மாநகராட்சி பள்ளி மாணவி ஒருவர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து அப்பள்ளியின் துணைத்தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 1998ம் ஆண்டு இதே ஜப்பான் நிறுவனம் நடத்திய போட்டியில் எங்கள் பள்ளி மாணவி கலையரசி வெற்றி பெற்றுஜப்பான் சென்று வந்தார். அதன் தொடர்ச்சியாக ஸ்ரீலட்சுமி செல்கிறார். இது மாநகராட்சி பள்ளிகளின் கல்வித் தரத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுகிறதுஎன்றார்.












Click it and Unblock the Notifications