ஸ்பிக் வழக்கு ... ஜெ. மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது
சென்னை:
ஸ்பிக் வழக்கில் தனி நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம்நிராகரித்தது. தனி நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என்று நீதிபதிகள்ஜெயசிம்ம பாபு மற்றும் இப்ராகிம் கலீபுல்லா ஆகியோர் கூறினர்.
ஆகஸ்ட் 18-ம் தேதி தனி நீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் பிறப்பித்தஉத்தரவில், ஸ்பிக் பங்குகளில் ரூ. 28.29 கோடிக்கு மோசடி செய்ததாக தொடரப்பட்டவழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தொழிலதிபர்ஏ.சி.முத்தையா, முன்னாள் தொழில் துறை செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர்செப்டம்பர் 4-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை எதிர்த்து ஜெயலலிதாத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயசிம்ம பாபு, நீதிபதி இப்ராகிம் கலீபுல்லா ஆகயோர்அடங்கிய டிவிஷன் பெஞ்ச், தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் ஸ்பிக் வழக்கின்விசாரணையை ரத்து செய்ய முடியாது. அது தொடர்ந்து நடக்கலாம்.
தனி நீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் பிறப்பித்த உத்தரவில் தலையிடஉயர்நீதிமன்றம் விரும்பவில்லை. இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்வதுவரை தொடர்ந்து நடவடிக்கைகளை தனி நீதிமன்றம் மேற்கொள்ளலாம் என்று கூறினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications