தாயை காத்த தனயன் சாவு
சென்னை:
தாயை கொல்ல வந்த தந்தையை தடுத்தபோது தலையில் சுத்தியலால் அடிபட்டு இறந்தார் மகன்.
சென்னை ஜாபர்கான்பேட்டை பச்சையப்ப நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் திபோசிஸ் (வயது 45). இவரது மனைவி விஜி (வயது 40). இவர்களுக்கு மரிமன்என்ற 16 வயது மகன் உள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக திபோசிசும், விஜியும் பிரிந்தனர்.
கணவர் கொடுமைப்படுத்துவதாக கூறி விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தார் விஜி.
இதற்கு திபோசிஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். 29ம் தேதி இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடந்தது. இதில் மனைவி விஜியை பங்கேற்கவிடாமல் தடுக்க வேண்டும் என்ற திட்டத்தோடு விஜி வீட்டுக்கு வந்தார் திபோசிஸ்.
இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. அப்போது பள்ளி முடிந்து மகன் மரிமன் வீடு திரும்பினான். தாய்க்கும், தந்தைக்கும்இடையில் நடந்து கொண்டிருந்த சண்டையை பார்த்து பயந்து போய் தாய் அருகில் போய் நின்றான்.
ஆத்திரமடைந்த திபோசிஸ் வீட்டில் இருந்த சுத்தியலால் மனைவியை அடிக்கப் பாய்ந்தார். அதை தடுப்பதற்காக தாய் முன்பு போய் நின்றார் மகன் மரிமன்.சுத்தியல் அடி அவரது தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்தார் மரிமன்.
அதோடு நில்லாமல் விஜியையும் சுத்தியலால் தாக்கி விட்டு ஓடி விட்டார் திபோசிஸ்.
பலத்த காயமடைந்த தாயும், மகனும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மறுநாள் சிகிச்சை பலனின்றி மகன் மரிமன் பரிதாபமாக இறந்தார்.