தமிழகத்தில் நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ. 20 அதிகரிப்பு
சென்னை:
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்த ஆண்டின் நெல் கொள்முதல் விலை, கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 20 ரூபாய்கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 1.9.2000 முதல் கொள்முதல் செய்யப்படும் சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 510ரூபாய் என்றும், "ஏ கிரேடு ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.540 என்றும் உயர்த்தி முதல்வர்ஆணையிட்டுள்ளார்.
தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடிக்கொள்முதல் நிலையங்களிலும், இதர பகுதிகளில் உள்ள வட்டக் கிடங்குகளிலும் கொள்முதல்செய்யப்படும் நெல்லுக்கு இப் புதிய விலை நிர்ணயம் பொருந்தும்.
1.9.2000 முதல் கொள்முதல் செய்யப்படும் சாதாரண ரக நெல்லுக்கும், "ஏ கிரேடு ரகநெல்லுக்கும் இடைநிகழ் செலவாக குவிண்டால் ஒன்றுக்கு 35 ரூபாய் கூடுதலாக வழங்குவதற்கு தமிழகஅரசு ஏற்கனவே ஆணையிட்டுள்ளது.
அதன்படி பார்த்தால் சாதாரண ரக நெல் ரூ.545 என்றும், "ஏ கிரேடு ரக நெல் ரூ.575 என்றும்விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications