பார்வதி ஷா மாமியாரின் மனு தள்ளுபடி
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் மைத்துனரால் கற்பழித்துக் கொல்லப்பட்ட பார்வதி ஷா வழக்கில் 2ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட மாமியார் பத்மாவதி ஷா, தனதுதண்டனையை நிறுத்தி வைக்குமாறு தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம்தள்ளுபடி செய்தது.
கடந்த ஆண்டு புதுவை வைர வியாபாரி ரவி ஷாவின் மனைவியான பார்வதி ஷாஅவரது மைத்துனர் கமல் ஷாவால் கற்பழித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில்கைதான கமல் ஷாவுக்குத் தூக்குத் தண்டனையும், சாட்சியை அழித்ததற்காக கமல்ஷாவின் தாய் பத்மாவதி ஷாவுக்கு இரண்டாண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்துசெவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந் நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வரை தனதுதண்டனையை நிறுத்தி வைக்குமாறு பத்மாவதி ஷா நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். இந்த மனு வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.
பத்மாவதி ஷாவின் வக்கீல் வாதாடுகையில், பத்மாவதி ஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளதண்டனை மூன்று வருட சிறைத் தண்டனையை விட குறைவாக இருப்பதால் அவர்ஜாமீனில் வெளிவரலாம். எனவே அவரது தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம்உத்தரவிட வேண்டுமென்று வாதாடினார்.
அரசு தரப்பு வக்கீல் இந்த சட்டம் குற்றவாளி ஜாமீனில் இருந்தால் மட்டுமே இதுபொருந்தும் என வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமார்பத்மாவதி ஷாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.
பின்னர் பத்மாவதி ஷாவின் வக்கீல் சவுந்தரராஜன் நிருபர்களிடம் பத்மாவதி ஷாவின்தண்டனையையும், கமல் ஷாவின் தண்டனையையும் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் மனு செய்யவிருப்பதாகக் கூறினார்.
இதற்கிடையே, பாண்டிச்சேரி முன்னாள் முதல்வரும், எதிர் கட்சித் தலைவருமானடி.ராமச்சந்திரன், தலைமறைவாக உள்ள பார்வதி ஷாவின் கணவர் ரவி ஷாவைவிரைவில் கண்டுபிடிக்கமாறு அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications