"கோபாலால் ராஜ்குமாரை மீட்க முடியாது ...
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட பிரபல நடிகர் ராஜ்குமாரைபோலீசாரால் மட்டுமே மீட்க முடியும் என வக்கீல் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சந்தனக்கடத்தல் வீரப்பனால் பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் ஆகஸ்ட் மாதம் 30-ம்தேதி இரவு காஜனூரில் உள்ள அவரது பண்ணை வீட்டிலிருந்து கடத்தப்பட்டார்.அவருடன் மேலும் மூவரும் கடத்தப்பட்டனர்.
ராஜ்குமாரை மீட்க வீரப்பன் விடுத்த கோரிக்கைகளை தமிழக, கர்நாடக அரசுகள்ஏற்றுக் கொண்டுள்ளன. ராஜ்குமாரை மீட்க அரசு தூதுவராக நக்கீரன் ஆசிரியர்கோபால் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
சில வருடங்களுக்கு முன்பு வீரப்பனுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவனை திருத்திஅழைத்து வருவதாகக் கூறி காட்டுக்குள் சென்றார் வக்கீல் கிருஷ்ணசாமி. ஆனால்வீரப்பனிடம் பினைக் கைதியாக சிக்கி தப்பிப் பிழைத்து வந்தார். தற்போது அவர்அளித்துள்ள பேட்டியில் போலீஸாரால் மட்டுமே ராஜ்குமாரை மீட்க முடியும் என்றுகூறியுள்ளார்.
வீரப்பன், ஜெயலலிதா, தேவேகவுடா, நடிகர்கள் ராஜ்குமார், ரஜினிகாந்த் உட்படபலரை கடத்தப் போகிறான் என்றும் அவனுக்கு விடுதலைப் புலிகளுடனும் தொடர்புஉண்டு என்று மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்திருந்தேன். இப்போது ராஜ்குமார்கடத்தப்பட்டுள்ளார்.
நான் கூறியவுடனேயே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைதவிர்க்கப்பட்டிருக்கும். என் அறிக்கையை மத்திய மாநில அரசுகள் முக்கியமாககருதவில்லை. எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் விளைவே இது.
தமிழக முதல்வருடன் தொடர்பு உண்டு என பகிரங்கமாகவே வீரப்பன் கூறியுள்ளான்.அவனுக்கு பல அரசியல்வாதிகளுடனும் தொடர்பு உள்ளது.
அரசு தூதர் நக்கீரன் கோபாலால் ராஜ்குமாரை மீட்க முடியாது. போலீசாரால் மட்டுமேஅது முடியும். செஞ்சிலுவைச் சங்கம் போன்ற தொண்டு நிறுவனத்தினரைச்சேர்ந்தவர்களை அனுப்பி ராஜ்குமாரை மீட்க முயற்சிக்கலாம் என கிருஷ்ணசாமிகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications