உணவு உற்பத்தியில் தமிழகம் முதலிடம் ... ஸ்டாலின் பெருமிதம்
கோவை:
கடந்த ஒரு ஆண்டில் தமிழகத்தில் தான் அதிக அளவாக 103 மெட்ரிக் டன் உணவுஉற்பத்தி செய்யப்பட்டுள்ளது என சென்னை நகர மேயர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
திருப்பூரில் உழவர் சந்தையை ஸ்டாலின் திறந்து வைத்து விற்பனையைத் துவக்கிவைத்தார். விழாவில் அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் 100 உழவர்சந்தைகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை அடுத்த மூன்றுமாதங்களில் எட்டிவிடும். இதுவரை 64 உழவர் சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன.
உழவர் சந்தை திட்டம் தேர்தல் வாக்குறுதியில் இடம் பெறாத திட்டம். சொன்னதைச்செய்வோம், செய்தைச் சொல்வோம் என்பதற்கு மேலாக இந்த உழவர் சந்தைகளைதிறந்து அதை தி.மு.க அரசு நிறைவேற்றி வருகிறது.
தமிழகத்தில் இதுவரை ஏற்படுத்தப்பட்டுள்ள உழவர் சந்தைகளில் 10.55 கோடிமெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், 68. 50 கோடி ரூபாய்அளவிற்கு வர்த்தகம் நடந்துள்ளது.
உழர் சந்தைகள் மூலம் 8 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 3.26 லட்சம்வாடிக்கையாளர்கள் உருவாகியுள்ளனர்.
இந்தியாவிலேயே தமிழகம் தான் உணவு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. கடந்த1999-2000ம் ஆண்டில் தமிழகத்தில் 103 மெட்ரிக் டன் உணவு உற்பத்திசெய்யப்பட்டுள்ளது என்றார்.
விழாவில் மாநில மாசுக்கட்டுப்பாடு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட கலெக்டர் சந்தானம், எம்.எல்.ஏ.,அருண்குமார்உட்பட பலர் கலந்து கொண்டனர்.