கடைக்காரர் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை

Subscribe to Oneindia Tamil

சேலம்:

கடை முன்பு வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் கடைக்காரரைக் கொலைசெய்த வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சேலம் மாவட்டம், கல்லாங்காட்டுப் புதூரைச் சேர்ந்தவர்கள் பிரகாஷ் (21), ரமேஷ்(20). இவரது நண்பர் வேணு (23). இவர்கள் அனைவரும் சேலம் அண்ணாநகரில்உள்ள ஒரு கடை வீதிக்குச் சென்றனர். அங்கு கலைவாணன் என்பவருக்குச்சொந்தமான காய்கறிக் கடை முன்பு தாங்கள் ஓட்டி வந்த இரண்டு சக்கர வாகனங்களைநிறுத்தினர்.

அப்போது கலைவாணன் இவர்களிடம் கடை முன்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாதுஎனக் கூறியுள்ளார். இதில், கலைவாணனுக்கும் மற்ற வருக்கும் இடையே தகராறுஏற்பட்டது. இந்த தகராறில், கலைவாணனை அடித்து உதைத்து கத்தியால்குத்தியுள்ளனர்.

பலத்த காயமடைந்த கலைவாணன், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டு இறந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர். சேலம் மூன்றாவது முதன்மை நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நீதிபதிஜபருல்லா அளித்த தீர்ப்பில், பிரகாஷ், ரமேஷ், வேணு ஆகிய மூவருக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+