வீரப்பனுடன் பேச்சுவார்த்தையைத் துவக்கினார் கோபால்
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் மூன்று பேரை மீட்பதற்காக சந்தன கடத்தல் வீரப்பனுடன், நக்கீரன் ஆசிரியர் கோபால் தீவிர பேச்சு நடத்திக்கொண்டிருப்பதாக நக்கீரன் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரப்பனைச் சந்திப்பதற்காக மூன்றாவது முறையாக கோபால் காட்டுக்குச் சென்றுள்ளார். புதன்கிழமை இரவு காட்டுக்குள் நுழைந்த கோபால்தற்போது வீரப்பனைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருப்பதாக நக்கீரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் காட்டிலுள்ள வீரப்பனின் மறைவிடத்தில் இந்தப் பேச்சு நடந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்தடா கைதிகளை விடுவிப்பது, தமிழக சிறையில் உள்ள ஐந்து தமிழ் தீவிரவாதிகளை விடுவிப்பது தொடர்பாக இரு மாநில அரசுகள் கொடுத்த தஸ்தாவேஜுகள்,ஆவணங்களை கோபால் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார்.
வீரப்பனுடன், கோபால் நடத்திய பேச்சு விவரம் குறித்து அறிய இரு மாநில அரசுகளும், மாநில மக்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications