"ராஜ்குமார் கடத்தலால் வரி வசூலில் பாதிப்பில்லை
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட சம்பவத்தால் மாநிலத்தில் வரி வசூல் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லைஎன்று கர்நாடக நிதித் துறை துணை அமைச்சர் எம். சிவன்னா தெரிவித்தார்.
பெங்களூரில் நிருபர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
ராஜ்குமார் கடத்தலால் தியேட்டர்கள் மூடிக் கிடக்கின்றன. இருப்பினும், மாநிலத்தில், வர்த்தக வரி வசூல் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.ஆனால், வரி வசூல் சற்று தாமதமாக நடைபெறுகிறது என்பது உண்மை.
இந்த ஆண்டில் ரூ. 6,100 கோடிக்கு வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரி வசூலைத் தீவிரப்படுத்தும்படி அனைத்து வரி வசூல் துறையினருக்கும்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பைத் தடுக்க தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது தொடரும். ஆனால், சிறு தொழிலதிபர்கள்தான் இலக்காக வைத்து இச்சோதனை நடத்தப்படுவதாகவும், பெரிய தொழிலதிபர்களிடம் சோதனை நடத்தப்படுவதில்லை என்றும் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை.
மாநில கருவூல நடவடிக்கைகளை முழுவதும் கம்ப்யூட்டர்மயமாக்கம் பணி அடுத்த 4 அல்லது 5 மாதங்களில் முடிக்கப்பட்டுவிடும் என்றார் சிவன்னா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications