For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு வழியாய் சென்னை வந்தது கிருஷ்ணா வாட்டர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆந்திராவில் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையை அடைந்தது. செப்டம்பர்2ம் தேதி முதல் சென்னை மக்களுக்கு "கிருஷ்ணா வாட்டர் கிடைக்கும்.

அடித்த அக்னி வெயிலில் சென்னை நகருக்கு தண்ணீர் தரக்கூடிய ஏரிகள் எல்லாம் காய்ந்து போயின. செங்குன்றம் ஏரியில் மட்டும்கொஞ்ச நஞ்சம் தண்ணீர் மீதமிருந்தது. அதையும் வீட்டுக் குழாய்கள் மூலம் வினியோகித்தால் கட்டுப்படி ஆகாது என்று கருதிலாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

லாரித் தண்ணீரும் சில நாட்களுக்கு தான் வரும் என்ற நிலையில் கடுமையான குடிநீர் பஞ்சத்தை எதிர்நோக்கியிருந்தது "திகிரேட்டர் சென்னை. எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்ற தவிப்பில் சென்னை கார்ப்பரேஷனும், மெட்ரோட வாட்டரும்"வருண பகவான் வருகைக்காக காத்திருந்தன.

இந்த நேரத்தில் ஆந்திராவில் மழை செம ஊத்து ஊத்தியதால் ஊரெல்லாம் வெள்ளக்காடு. ஆறுகள், ஏரிகள் எல்லாம் நிரம்பிவழிந்து வெளியேறிய தண்ணீரை கண்டலேறு அணைக்கு திருப்பி விட்டது ஆந்திர அரசு.

பெரிய மனசு வைத்து ஆந்திர அரசு செய்த இந்த நல்ல காரியத்தால் கண்டலேறு அணை ஓரிரு நாட்களில் நிரம்பியது. அந்தஅணையில் தேங்கிய தண்ணீரை தமிழகத்திற்கு தர வேண்டிய "கோட்டாப்படி உடனே தருமாறு தமிழக அரசு கேட்டது தான்தாமதம். அடுத்த நாளே கண்டலேறு அணை திறந்து விடப்பட்டது.

அங்கிருந்து புறப்பட்ட கிருஷ்ணா நீர் 150 கி லா மீட்டார் தூரம் பாய்ந்து வந்து புதன்கிழமை நள்ளிரவில் தமிழக எல்லையைஅடைந்தது. தமிழகத்தில் பூண்டி நீர்த் தேக்கத்தில் அந்த தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் முதலில் திறந்து விடப்பட்டது. பின்னர் அது 400 கன அடியாகஉயர்த்தப்பட்டது. பூண்டிக்கு வரும் வழியில் வீணாகும் தண்ணீர் போக 300 கன அடி தண்ணீரை தேக்க முடியும் என்று தமிழகஅதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இங்கு தேங்கும் நீரை உடனடியாக செங்குன்றம் ஏரிக்கு அனுப்பவும், அங்கிருந்து சென்னை மக்களுக்கு கிருஷ்ணா நீரைவினியோகம் செய்யவும் தமிழக பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது.

தற்போது கண்டலேறு அணையில் 8 டி.எம்.சிக்கும் மேல் தண்ணீர் உள்ளது. அதில் 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடவே மூன்றுமாதங்கள் ஆகும். எனவே மூன்று மாதங்களுக்கு சென்னை குடிநீர் பிரச்னை தீரும். அதன் பின்னர் பருவ மழை கை கொடுத்துவிடும் என்கின்றனர் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X