3--வது அணி உருவாக வாய்ப்பு கொடுக்கக்கூடாது - கம்யூனிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

3-வது அணி உருவாக வாய்ப்பு ஏதும் ஏற்படுவதைத் தடுக்க பா.ஜ.க., தி.மு.க.கூட்டணியை எதிர்க்கும் மதச்சார்பற்ற கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிற தீர்மானங்கள் வருமாறு:

தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் அணி சேர்ந்துள்ள தி.மு.க.வும், மத்திய அரசின்கொள்கையைத்தான் அமலாக்கி வருகிறது. பா.ஜ.க.-தி.மு.க., கூட்டணிக்கு எதிர்ப்புவருவதை உணர்ந்த ஆளும் கட்சி, மதச்சார்பற்ற அணியைப் பிளவுபடுத்தி மூன்றாவதுஅணியை உருவாக்க உள்நோக்கத்தோடு தூண்டி வருகிறது.

பா.ஜ.க.-தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் வலுவடையாமல் தடுத்து நிறுத்துவது இடதுசாரி, ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகளின் கடமை. மூன்றாவது அணிக்கு எந்தவகையிலும் வாய்ப்பு ஏற்பட்டு விடாமல் மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளகட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் ஜாதி அமைப்புகள் புற்றீசல் போல தோன்றி அரசியல் கட்சிகளாகமாற்று உருவம் எடுத்து வருவது கவலையளிக்கிறது. இத்தகைய வளர்ச்சியைஅனுமதிப்பது ஜாதி சண்டையை தூண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+