ஜெ. மீது புது வழக்கு ... மதிப்பு ரூ. 248 கோடி
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது புதிதாக ரூ. 248 கோடி ஊழல் வழக்கு ஒன்றுபதிவு செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக ஜெயலிலதா,முன்னாள் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது மொத்தம் 46 வழக்குகள்தொடரப்பட்டது. இவற்றில் இதுவரை பத்து வழக்குகளில் தீர்ப்புவழங்கப்பட்டிருக்கிறது.
சொத்துக் குவிப்பு தொடர்பாக பல்வேறு வெளிநாடுகளில் விசாரணை நடத்திய லஞ்சஒழிப்பு போலீசார் ஜெயலலிதாவும் தினகரனும் (அ.தி.மு.க. எம்.பி) சேர்ந்துஇங்கிலாந்தில் இரண்டு பிரம்மாண்ட நட்சத்திர ஓட்டல்களை வாங்கியிருப்பதாகஜெயலலிதா, தினகரன் மீது புதிய ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சனிக்கிழமை நீதிமன்றம் விடுமுறை என்பதால் சென்னை பெருநகர முதன்மை ஆய்வுநீதிபதி விஸ்வநாதனின் வீட்டிற்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் முதல்தகவல் அறிக்கையை தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஜெயலலிதாவும, இரண்டாவது குற்றவாளியாகதினகரன் எம்.பி.யும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.