For Daily Alerts
Just In
கூட்டணி ஆட்சி வராது .. கூறுகிறார் வாழப்பாடி
சென்னை:
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படாது என்று வந்தவாசியில் நடந்த வன்னியர்விழிப்புணர்வு எழுச்சி மாநாட்டில் வாழப்பாடி ராமமூர்த்தி பேசினார்.
வந்தவாசி பயணியர் விடுதியில் வாழப்பாடி ராமமூர்த்தி நிருபர்களை சந்தித்தார். நான்அரசியலுக்கு செல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்த ராமதாசை போன்று நான் சமுதாயசீர்திருத்தத்திற்கு செல்ல மாட்டேன் என்று நான் சத்தியம் செய்தது கிடையாது.
தமிழ்நாட்டில் மூன்று மிகப் பெரிய சமுதாயங்கள் உள்ளன. வன்னியர் சமுதாயம்,முக்குலத்தோர், ஆதிதிராவிடர். இந்த சமுதாயம் 75 சதவிகித மக்கள் தொகை உடையது.ஆகவே இவர்களுக்கு ஏதாவது ஒரு பிரிவினருக்கு சேவை செய்வதை சாதிய அரசியல்என்று கொச்சைப்படுத்துவது துரதிருஷ்டவசமானது.
இப்பொழுது என்னுடைய அணுகுமுறையெல்லாம் சாதிய சமுதாய சங்கங்கள் அரசியல்ரீதியாக இயங்கக்கூடாது என்பதுதான் என்றார் வாழப்பாடி.
Comments
Story first published: Saturday, September 2, 2000, 5:30 [IST]