For Daily Alerts
Just In
வன்முறை வரலாம் ... இலங்கை அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
கொழும்பு:
இலங்கையில் வாழும் அமெரிக்கர்களை, எந்தவிதமான ஊர்வலங்களிலோ அல்லதுபொதுக் கூட்டங்களிலோ ஈடுபட வேண்டாம் என அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.
இலங்கையில் அக்டோபர் 10-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் சமயத்தில்வன்முறைகள் நடக்க வாய்ப்புகள் உள்ளதால் இந்த எச்சரிக்கையை அமெரிக்க அரசுவிடுத்துள்ளது.
சென்ற முறை இலங்கையில் நடந்த தேர்தலின் போது வன்முறை வெடித்தது. பொதுச்சொத்துக்கள் நாசப்பட்டதுடன், பலர் கொல்லப்பட்டனர்.
இந்த தேர்தலின் போதும் அது போன்ற வன்முறை நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது.எனவே, அமெரிக்க குடிமக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்குமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளனர். வேறு சில நாடுகளும் இதே போன்ற எச்சரிக்கைகளைஇலங்கையில் இருக்கும் அவர்கள் குடிமக்களுக்கு விடுத்துள்ளன.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, September 2, 2000, 5:30 [IST]