பயஸ், பூபதி ஜோடி வெளியேறியது
நியூயார்க்:
யு.எஸ்.ஓபன் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்திய ஜோடி லியாண்டர் பயஸ்,மகேஷ் பூபதி ஜோடி தோல்வியுற்று வெளியேறியது.
கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் இரட்டையர் போட்டிகளில் இந்திய ஜோடிசாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்தது. இடையில் காயம் மற்றும் மனக்கசப்பு காரணமாக பயஸ், பூபதி ஜோடி பிரிந்தது.
இந்த நிலையில் யு.எஸ்.ஓபன் போட்டிக்கு முன்பு மீண்டும் சேர்ந்தது. யு.எஸ். ஓபன்போட்டியில் தெம்பாக களம் இறங்கியது. முதல் சுற்றில் ஜெய்ம் ஓன்சின்ஸ், டேனியல்ஓர்சானிக் ஜோடியை எதிர்த்து பயஸ், பூபதி ஜோடி மோதியது. இதில், 4-6, 6-4, 7-6(7-5) என்ற செட்களில் இந்திய ஜோடி தோல்வியைத் தழுவியது.
தலைகள் உருண்டன:
யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள்தோல்வியைத் தழுவினர்.
ரஷியாவின் அன்னா கூர்னிகோவா, பெல்ஜிய வீராங்கனை ஜஸ்டின் ஹெனினிடம்தோல்வியுற்றார்.
ஆடவர் பிரிவில், ரஷியாவின் யெவ்ஜெனி கபல்னிகோவ் தோல்வியுற்றார்.ஸ்லோவாகிய வீரர் டொமினிக் ஹிரபடியிடம் 6-4, 7-6 (7-5), 6-1 என்ற செட்கணக்கில் தோல்வியுற்றார்.
பிரெஞ்சு வீராங்கனை கோன்சிதா மார்ட்டினஸும் தோல்வியைத் தழுவினர். 7-வதுநிலையிலிருக்கும் அவர், 25-வது நிலை வீராங்கனையான ரஷியாவின் எலீனாவின்டெமெனிடீவாவிடம் தோல்வியுற்றார்.
யு.என்.ஐ.