For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெர்மன் சர்வதேச சைக்கிள் கண்காட்சியில் இந்திய நிறுவனங்கள் பங்கேற்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஜெர்மனியில் நடைபெற உள்ள சைக்கிள் கண்காட்சியில் இந்தியாவில் சைக்கிள்தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பங்கு கொள்ள உள்ளன.

இது தொடர்பாக இந்தோ-ஜெர்மனி ஏற்றுமதி வளர்ச்சித் திட்ட இயக்குநர் கெப்ஸ்சுல்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஜெர்மனியில் உள்ள கொலோன் நகரில் செப்டம்பர் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைசர்வதேச சைக்கிள் கண்காட்சி (ஐ.எஃப்.எம்.ஏ.) நடைபெற உள்ளது.

இதில் இந்தியாவில் சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பல நிறுவனங்கள்பங்கு கொள்கின்றன.

ஐ.எஃப்.எம்.ஏ. கண்காட்சி என்பது உலகிலேயே பெரிய சைக்கிள் மற்றும் உதிரிபாகங்கள் கண்காட்சியாகும். பல நாடுகளைச் சேர்ந்த சைக்கிள் தயாரிப்புநிறுவனங்களும் இக் கண்காட்சியில் கலந்து கொண்டு தங்களது தயாரிப்புகளைக்காட்சிக்கு வைக்க உள்ளன.

இக் கண்காட்சியில் உலகின் பெரிய சைக்கிள் சந்தையாகக் கருதப்படும் ஜெர்மனி,ஐரோப்பிய யூனியன் நாடுகள், அமெரிக்கா மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தசைக்கிள் உற்பத்தியாளர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு கோடியே 20 லட்சம் சைக்கிள்தயாரிக்கப்படுகின்றன. உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக சைக்கிள் உற்பத்தியில்இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஜெர்மனியில் நடைபெற உள்ள சர்வதேச சைக்கிள் கண்காட்சி, இந்திய சைக்கிள்தயாரிப்பாளர்களுக்கு புதிய மார்க்கெட் வாய்ப்பையும், புதிய தொழில்நுட்பத்தகவல்களையும் அளிக்கும் என்றார் கெப்ஸ்சுல்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X