284 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது
டெல்லி:
ஆசிரியர் பணியில் சிறப்பாகச் சேவையாற்றியதற்காக 284 பேருக்கு நல்லாசிரியர்விருது வழங்கப்பட்டது.
முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த தினமானசெப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அந்த நாளில் ஆசிரியர் பணியில் சிறப்பாகச் சேவையாற்றியவர்களுக்கு நல்லாசிரியர்விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இந்தியா முழுவதும் இருந்து 284 பேர் தேர்வு செய்யப்பட்டுஅவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில்விருதுகளை குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் வழங்கினார்.
விருது பெற்றவர்களில் 74 பேர் பெண்கள். இது தவிர சம்ஸ்கிருதப் பள்ளியைச் சேர்ந்த7 ஆசிரியர்கள், அராபி மற்றும் பெர்சிய பள்ளிகளைச் சேர்ந்த 3 ஆசிரியர்களும் இதில்அடங்குவர்.
பாராட்டுப் பத்திரம், வெள்ளிப் பதக்கம், ரூ. 25 ஆயிரம் பணமுடிப்பு கொண்டது இந்தநல்லாசிரியர் விருது.
விருது வழங்கு விழாவில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி பேசினார்.
1958-59-ம் ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுவருகிறது. தொடக்கக் கல்வி, உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளைச் சேர்ந்தஆசிரியர்களுக்கு அவர்கள் ஆற்றிய சேவையைக் கருத்தில் கொண்டு இந்த விருதுவழங்கப்படுகிறது.
மாணவர்களுக்குக் கல்வி புகட்டி அவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்களுக்குஇத்தகைய விருது வழங்குவதன் மூலம் நாடு தனது மரியாதையைச் செலுத்துகிறதுஎன்றார் முரளி மனோகர் ஜோஷி.
யு.என்.ஐ.