தீவிரவாதத்தைத் தடுக்க இந்தியா-பிரிட்டன் சிறப்புக் குழு
டெல்லி:
சர்வதேச தீவிரவாதம், போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தலை முறியடிக்க சிறப்புக் கூட்டு அமைக்கஇந்தியாவும் இங்கிலாந்தும் முடிவு செய்துள்ளன.
பிரிட்டனின் உள்துறைச் செயலாளர் ஜேக் ஸ்ட்ராவும் இந்திய உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோர்டெல்லியில் இந்தத் தகவலைத் தெரிவித்தனர். இந்தக் குழு ஒரு நிரந்தர அமைப்பாக இருக்கும்.
சர்வதேச பயங்கரவாதத்தைத் தடுக்க அமெரிக்கா உள்பட பல நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுசிறப்புக் குழுக்களை அமைத்துள்ளது. அனைத்து ஐரோப்பிய நாடுகளுடனும் இதே போன்ற ஒப்பந்தம் செய்துகொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்தியா-பிரிட்டனில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகள் குறித்து இந்தக் கூட்டுக் குழு தகவல்களை பரிமாறிக்கொள்ளும். இது தவிர ஜம்மூ-காஷ்மீர், பஞ்சாபில் இயங்கி வரும் வரும் தீவிரவாதக் குழுக்கள், அவற்றின்சர்வதேச தொடர்புகள் குறித்த விவரங்கைள பிரிட்டன் இந்தியாவுக்கு வழங்கும்.
பிரிட்டனில் தீவிரவாதத்துக்கு எதிரான புதிய சட்டம் வரும் அக்டோபர் முதல் அமலுக்கு வர உள்ளது. இந்தசட்டத்தின் நகலை அத்வானியிடம் ஜேக் ஸ்ட்ரா வழங்கினார்.












Click it and Unblock the Notifications