அமைதியாகக் கரைந்த விநாயகர்கள்
கோவை:
கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள்கரைக்கப்பட்டன.
கோவையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியைமுன்னிட்டு விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில்வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டன.
இந்த சிலைகள் செவ்வாய்க்கிழமை மாலை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டன. தெப்பக் குளம் மைதானம், காந்திபுரம்,ஆவாரம்பாளையம் ஆகிய இடங்களில் இருந்து விநாயகர்சிலைகள் ஊர்வலமாக சிங்காநல்லூர் குளத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
வழக்கமாக முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்படும் விநாயகர்சிலைகள், இம்முறை இந்தக் குளத்தில் தண்ணீர் இல்லாததால்சிங்காநல்லூர் குளத்தில் கரைக்கப்பட்டன.
வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நடந்து விடாமல் தவிர்க்கும்பொருட்டு விநாயகர் ஊர்வலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டிருந்தது. அதிரடிப்படைப் போலீசாரும் ஊர்வலப்பாதையில் குவிக்கப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications