அப்துல் கரீமைச் சந்திப்பார் ரஜினி?
பெங்களூர்:
பெங்களூர் வந்துள்ள நடிகர் ரஜினிகாந்த், சுப்ரீம் கோர்ட்டில் தடா கைதிகளைவிடுவிப்பதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ள மைசூர் அப்துல் கரீமைச் சந்தித்துசமாதானம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை இரவு நக்கீரன் கோபாலும், நடிகர் ரஜினிகாந்த்தும் பெங்களூர் வந்தனர்.முதல்வர் கிருஷ்ணா, ராஜ்குமார் மனைவி பர்வதம்மா மற்றம் அவரதுகுடும்பத்தினரைச் சந்தித்தனர்.
ராஜ்குமார் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக, மைசூரைச் சேர்ந்த ஓய்வு பெற்றடி.எஸ்.பி. அப்துல் கரீம் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு குறித்து ரஜினியும்பிறரும் விவாதித்துள்ளதாகத் தெரிகிறது.
எனவே, மைசூர் சென்று, அப்துல் கரீமை ரஜினிகாந்த் சந்தித்துப் பேசுவார் என்றும்,வழக்கை வாபஸ் பெற கேட்டுக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவேகன்னட நடிகர்கள், நடிகையர்கள் அப்துல் கரீமைச் சந்தித்து வழக்கை வாபஸ் பெறக்கோரியுள்ளனர். ஆனால் முடியாது என்று கரீம் கூறிவிட்டார்.
சென்னையில் ராஜ்குமார் ரசிகர்கள்
இதற்கிடையே, நடிகர் ராஜ்குமாரின் ரசிகர்கள் என்று கூறப்படும் சுமார் 100 பேர்சென்னை வந்துள்ளனர். அவர்கள் வியாழக்கிழமை முதல்வர் கருணாநிதியைச்சந்திக்கின்றனர்.