இத்தனை வகை மாமியார்களா?
சென்னை:
சென்னையில் சிறந்த மாமியார்களைத் தேர்ந்தெடுக்கும் சூப்பர் மாமியார் போட்டி புதன்கிழமை நடந்தது.
சென்னை அசோக்நகர் முன்னேறிய பெண்கள் சங்கத்தின் சார்பில் ராணி சீதை அரங்கத்தில் சூப்பர் மாமியார் 2000என்ற போட்டி நடந்தது. இந்தப் போட்டிக்காக வண்ணப் பட்டுச் சேலைகளில் வந்திருந்த மாமியார்கள் மேடையில்தோன்றினார்கள்.
இந்த மாமியார்களுக்காக, நாடகம், பாட்டுடன் கூடிய நாடகம், வராத தட்சணை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளைமேடையில் தோன்றி நடத்திக் காட்டினார்கள். சூப்பர் மாமியார் -2000 ஐத் தேர்ந்தெடுப்பதற்காக நடிகை சச்சு,எழுத்தாளர் உஷா சுப்ரமணியன், ரேணுகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் போட்டியில் கலந்து கொண்ட மாமியார்களிடம் குடும்பப் பிரச்சனைகள் குறித்து சிக்கலானகேள்விகளைக் கேட்டனர். பல போட்டிகளில் கலந்து கொண்டு அதிக மதிப்பெண்களை எடுத்த மேற்கு மாம்பலம்பகுதியைச் சேர்ந்த கவுசல்யா பால்பாண்டியன் சூப்பர் மாமியார் 2000 பட்டத்தை வென்றார்.
மருமகள் மெச்சிய மாமியார் பட்டத்தை இந்திரா சுப்ரமணியம் என்பவர் பெற்றார். சமையல் போட்டி, தையல்போட்டி, உடல் ஆரோக்கியத்துக்கான போட்டி, பாட்டி வைத்தியம் குறித்த போட்டி என்று பல பிரிவுகளில்போட்டி நடத்தப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பெண்கள் சங்கத் தலைவி பூர்ணிமா குமார், செயலாளர்கள் அலமேலு,ராமகிருஷ்ணன், பொருளாளர் ரெமா பணிக்கர் ஆகியோர் செய்திருந்தனர்.