For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூர் வந்தார் கருணாநிதி: கிருஷ்ணாவுடன் தீவிர ஆலோசனை

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து விடுவிப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர்கிருஷ்ணாவுடன் விவாதிக்க தமிழக முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை காலை பெங்களூர் வந்தார்.

அவருடன் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் பெங்களூர் வந்தார். விமான நிலையத்திலிருந்து நேராகதலைமைச் செயலகமான விதான செளதாவுக்கு வந்த கருணாநிதி உடனடியாக முதல்வர் கிருஷ்ணாவுடன்ஆலோசனையைத் தொடங்கினார்.

இந்த ஆலோசனையில் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

மைசூர் சிறையில் உள்ள தமிழ் தடா கைதிகளை விடுதலை விஷயத்தில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையைஎதிர்த்து மேல் முறையீடு செய்வது, மீண்டும் நக்கீரன் கோபாலையே காட்டுக்கு அனுப்புவதா அல்லது வேறொருதூதரை அனுப்புவதா என்பது குறித்து இரு முதல்வர்களும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜ்குமார் கடத்தப்பட்டு இன்றுடன் 39 நாட்கள் ஆகிவிட்டன.

இந் நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதியை எதிர்த்து அறிவிக்கப்பட்ட பெங்களூர் பந்த் பிசுபிசுத்துப் போனது.இந்த பந்துக்கு 3 கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்தன. ஆனால், இதற்கு பொது மக்களிடம் ஆதரவுகிடைக்கவில்லை.

பந்த் எல்லாம் ஏதுமில்லை என நகர காவல்துறை கமிஷ்னர் மடியால் கூறியுள்ளார். இருப்பிலும் பல பகுதிகளிலும்குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இந்த பந்த் அழைப்பினால் பெங்களூரில் எந்தவிதத்திலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. தமிழகபஸ்கள், வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் இயங்குகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X